News August 8, 2024
இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை

திருவள்ளூரை சேர்ந்த நேதாஜி(22) சென்னையில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்தபோது செல்போன் மூலம் கடலூரை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த 1.6.2016 அன்று கடலூர் வந்த நேதாஜி சிறுமியை பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடலூர் போலீசார் வழக்குபதிந்து நேதாஜியை கைது செய்தனர். இவ்வழக்கில் இன்று, கடலூர் போக்சோ நீதிபதி லட்சுமி, நேதாஜிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News December 8, 2025
கடலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

கடலூர் மாவட்ட மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News December 8, 2025
கடலூரில் பழைய வாகனங்கள் ஏலம்; எஸ்பி அறிவிப்பு

கடலூர் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள், 34 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 50 வாகனங்கள் வருகிற டிச.23ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படும் என்று எஸ்பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10,000 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
News December 8, 2025
கடலூர்: ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

‘ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க


