News January 24, 2025
இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

போடியை சேர்ந்தவர் வர்ஷாஸ்ரீ (19). இவர் கல்லூரிக்கு சென்ற வந்த நிலையில் படிப்பு சரிவராத காரணத்தினால் பொங்கலுக்கு பின் கல்லூரி செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவருக்கு வரன் பார்த்த நிலையில் அதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக வர்ஷா ஸ்ரீ நேற்று (ஜன.23) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள் இதுகுறித்து போடி போலீசார் விசாரணை.
Similar News
News November 21, 2025
தேனி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 21, 2025
தேனி: பைக்கில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கூடலூரை சேர்ந்தவர் பாக்கியம் (60). இவர் நேற்று (நவ.20) அவரது உறவினரின் பைக்கில் பின்னால் அமர்ந்து வீரபாண்டி கோவிலுக்கு சென்றுள்ளார். உப்பார்பட்டி விளக்கு அருகே பைக் வந்து கொண்டிருந்த போது திடீரென பாக்கியம் மயங்கி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு.
News November 21, 2025
தேனி: ரிப்போட்டருக்கு கொலை மிரட்டல்

போடி பகுதியை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் ஒரு நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் போடியை சேர்ந்த மணிமாறன் (52), என்பவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் மணிமாறன் வழக்கை வாபஸ் பெறுமாறு வினோத்பாபுவை தகாத வார்த்தையால் பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போடி போலீசார் மணிமாறன் மீது வழக்கு (நவ.20) பதிவு.


