News April 27, 2025
இளம்பெண் தற்கொலை மாமியார், கணவன் இருவர் கைது

மணவாளன் கரையில் நேற்று (ஏப்.25) ஜெய அற்புதம் என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஜெய அற்புதம் தாயார் மாரிக்கண்ணு காவல்துறையில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருமயம் காவல்துறை தற்கொலைக்கு துண்டியதாக ஜெயா அற்புதம் மாமியார் வள்ளிக்கண்ணு மற்றும் அவரது கணவர் வீரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News April 30, 2025
சாலை விபத்தில் தொழிலாளி பலி

ராமகவுண்டம்பட்டி வடக்கிபட்டியைச் சேர்ந்தவர் அழகன், தொழிலாளியான இவர், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் ராமகவுண்டம்பட்டி அருகே திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் அழகன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அழகன் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News April 29, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 29-04-2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News April 29, 2025
புதுக்கோட்டையில் மே.1 மதுபான கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான கடை மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் டாஸ்மார்க் மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் (மே.1) “உழைப்பாளர் தினத்தை ” முன்னிட்டு மதுக்கடைகள் இயங்காது எனவும் அன்று சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.