News May 7, 2024
இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் 8-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன், ஆட்டோ டிரைவர், மனைவி ஆனந்தி. முனியன் சரிவர ஆட்டோ ஓட்ட செல்லாமல் மதுகுடித்து விட்டு தினமும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆனந்தி நேற்று மதியம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
Similar News
News April 21, 2025
உங்க அக்கவுண்ட்ல பணம் பத்திரமா இருக்கணுமா?

சேலம் மக்களே அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என சேலம் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
News April 20, 2025
இரவு நேரங்களில் ஆபத்தா? உடனே அழையுங்கள்!

சேலம் மாவட்டம் காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றாலோ, விபத்து என்றாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட மொபைல் நம்பரை அழைத்தால், காவலர்கள் உடனே உதவிக்கு வருவார்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தி அந்த எண்களையும் அறிவித்துள்ளனர்.
News April 20, 2025
சேலம் வழியாக பாட்னாவுக்கு கோடைக்கால சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வரும் ஏப்.25, மே 02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவிற்கும், மறுமார்க்கத்தில், ஏப்.28, மே 05, 12, 19, 26, ஜூன் 02 ஆகிய தேதிகளில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்; டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.