News April 7, 2025
இளம்பெண்ணை கடத்திய சென்னை போலீஸ்காரர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி மகளான 24 வயது இளம்பெண், எம்.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 3ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) புகார் கொடுத்தார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் போலீசாக பணிபுரியும் ரவிச்சந்திரன் (34) என்பவர் அப்பெண்ணை கடத்திச் சென்று இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
Similar News
News December 18, 2025
தி.மலை: உதவித்தொகை குறித்து ஆட்சியர் அறிவித்தார்!

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளைத் தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. (Counseling) தேர்வாகி, ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்கும் மாணவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். தேவையான சான்றிதழ்களுடன் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
தி.மலை இளைஞர்களே MISS பண்ணிடாதீங்க!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை டிச-19 காலை 10 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் அதிகமான பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ முடித்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதில் பங்குபெற்று பயன்பெறலாம். விவரங்களுக்கு-9629022086 ஷேர்.
News December 18, 2025
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

தி.மலை மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


