News April 7, 2025
இளம்பெண்ணை கடத்திய சென்னை போலீஸ்காரர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி மகளான 24 வயது இளம்பெண், எம்.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 3ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) புகார் கொடுத்தார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் போலீசாக பணிபுரியும் ரவிச்சந்திரன் (34) என்பவர் அப்பெண்ணை கடத்திச் சென்று இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
Similar News
News December 21, 2025
தி.மலை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
தி.மலை: மனைவி கண் முன் கணவருக்கு நேர்ந்த சோகம்!

செய்யாறு அருகே விவசாயி செல்வன் (54), டிச-19 தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நேர்ந்த விபத்தில் உயிரிழந்தார். வந்தவாசி – மேல்மா கூட்டுச்சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனைவி கண்ணெதிரே கணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 21, 2025
தி.மலை: அப்பாவை துடிதுடிக்க அடித்து கொன்ற மகன்!

வந்தவாசி அருகே, மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தை முருகனை (55) அடித்துக் கொன்ற மகன் சரத்குமார் (34) கைது செய்யப்பட்டார். கிருஷ்ணாபுரம் கூட்டுச்சாலையில் உள்ள நிழற்குடையில் தங்கியிருந்த முருகனிடம், அவரது மகன் சரத்குமார் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். அவர் தர மறுத்ததால் கட்டையால் தாக்கியதில் முருகன் உயிரிழந்தார். வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரைச் சிறையில் அடைத்தனர்.


