News October 24, 2024
இலவச அரிசிக்கான பணம் நாளை வங்கியில் வரவு வைப்பு

புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.1,200, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.600 அவர்களது வங்கிக் கணக்கில் நாளை வரவு வைக்கப்பட உள்ளது என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
புதுச்சேரி: தாவரவியல் பூங்கா நாளை திறப்பு

புதுச்சேரியின் சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக விளங்கும் தாவரவியல் பூங்கா மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ளது. சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் 3500 மரங்களுடன் கூடிய தாவரவியல் பூங்கா ஸ்மார்ட் திட்டத்தின் மூலம் ரூ.9.11 கோடி செலவில் புனரமைக்கும் பணிகள் 2023ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் அமைச்சர் ரங்கசாமி பூங்காவை திறந்து வைக்கிறார்.
News October 23, 2025
புதுச்சேரியில் தீபாவளி மதுபான விற்பனை சரிவு

புதுவையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை அதிகளவில் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மதுபான விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு கடந்த 3 மாதம் முன்பு அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் வரியை உயர்த்தியதே காரணம் என கூறப்படுகிறது.
News October 23, 2025
புதுச்சேரி: அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, அனைத்து துறைகளின் அறை எண்களை அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் அவற்றை பின்பற்றி தங்கள் இருப்பிட பகுதிகளில் மழையினால் ஏற்படும் பிரச்சினைகளை அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு (கட்டணமில்லா தொலைபேசி எண்கள்) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.