News May 16, 2024

இலங்கை மீனவர்கள் 14 பேர் ஐந்து படகுடன் கைது

image

இந்திய கடல் எல்லை பரப்பில் மீன்பிடித்த இலங்கை பருத்தித் துறை பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் அருகே இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்திய எல்லைக்குள்
ஐந்து படகு மூலம் கடல் அட்டைகளைப் பிடித்த இலங்கை மீனவர்களை கண்டு அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது.

Similar News

News October 28, 2025

நாகை: ரூ.30,000 மாத சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 28, 2025

நாகை: மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

image

வேளாங்கண்ணி கடலில் குளிக்கும் போது நேற்று மாயமான பெங்களூர் இளைஞர் பாஹாபா உடல் இன்று செருதூர் கடற்கரையில் கரை ஒதுங்கியது. நேற்று நண்பர்களுடன் கடலில் குளித்த 7 பேரில், அலையில் சிக்கிய மூவரில் அருண், முனுஷ் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாயமான பாஹாபா இன்று உயிரிழந்த நிலையில் செருதூர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதை தொடர்ந்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 28, 2025

நாகை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!