News September 14, 2024
இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 19 மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி விசைப்படகுகளில், கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 19, 2025
செங்கல்பட்டு: வேலை செய்த வீட்டில் பெண் கைவரிசை!

தாம்பரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுகுமார் (71) என்பவரது வீட்டில், திருவள்ளூரைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவர் சமையல் வேலைக்குச் சேர்ந்தார். ஒரு மாதத்திலேயே அவர் திடீரென வேலைக்கு வராமல் தலைமறைவானார். சந்தேகமடைந்த சுகுமார் பீரோவைச் சோதித்தபோது, அதிலிருந்த நகை மற்றும் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 19, 2025
செங்கல்பட்டு: மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி!

தாம்பரம் அடுத்த முடிச்சூரைச் சேர்ந்த சீனி முருகன் (45) என்ற பெயிண்டர், சேலையூர் அகரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தார். டிச-17 பணியின் போது அவர் ஏணியைத் தூக்கிச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சாரக் கம்பியில் ஏணி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சீனி முருகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


