News August 18, 2024

இலங்கைக்கு கஞ்சா கடத்திய 8 பேர் கைது

image

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி கொண்டு செல்ல இருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News October 16, 2025

BREAKING பரமக்குடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் வராத ரூ.35,300 பணம் மற்றும் வெடி, கிப்ட் பாக்ஸ்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்கள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 16, 2025

ராமநாதபுரம்: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 16, 2025

BREAKING: ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்தந்த பகுதி மழையின் நிலைக்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்து கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!