News May 14, 2024
இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் ராக்கு இவரது மகள் பாண்டிச்செல்வி எட்டாம் வகுப்பு பயிலும் போது உடல் நலக் குறைவால் மூன்று ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். மகளை நினைத்து வாடிக் கொண்டிருந்த தாய் ராக்கு அன்னையர் தினத்தன்று இறந்த பாண்டி செல்வியின் புகைப்பட கட்டவுட் படம் வைத்து பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார். இச்செயலால் உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Similar News
News March 6, 2026
சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News March 6, 2026
சிவகங்கை: அஜித் கொலை வழக்கு; 4 போலீசாரை கைது செய்ய தடை.!

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், DSP சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், SI சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகிய 4 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்ததால், 12 ம் தேதி வரை 4 பேரும் கைதிலிருந்து தப்பியுள்ளனர். மீண்டும் மார்ச்.16 ல் வழக்கு விசாரிக்கப்படும்.
News March 5, 2026
சிவகங்கை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

சிவகங்கை மக்களே, இங்கு <


