News October 25, 2024

இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்

image

எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்த புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த வீரமணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சரவணன்குமார், அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் என்கின்ற தட்சணாமூர்த்தி, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News September 16, 2025

புதுச்சேரி: மின் இணைப்பு துண்டிக்கப்படும், எச்சரிக்கை!

image

மின்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வில்லியனுார், பூமியான்பேட், லாஸ்பேட், கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனுார், காட்டேரிக்குப்பம் ஆகிய அலுவலகத்திற்கு உட்பட மின் நுகர்வோர்கள், தங்களுடைய மின் கட்டண பாக்கியை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT

News September 16, 2025

புதுச்சேரி: ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

புதுவை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க உத்தரவு

image

மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குறைதீர் கூட்டத்தில் பேசுகையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பதை கண்காணிக்க நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் குப்பைகள் கிடப்பதை ஒழுங்குபடுத்த சிறப்பு தூய்மை பணி திட்டம் உருவாக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!