News October 25, 2024
இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்

எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்த புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த வீரமணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சரவணன்குமார், அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் என்கின்ற தட்சணாமூர்த்தி, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News October 21, 2025
புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில்..அரசு வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 21, 2025
புதுவையில் விரைவில் ஐ.டி. நிறுவனம்!

புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கடந்த சில தினங்களுக்கு முன்பு சோஹோ ஐ.டி. நிறுவன தலைவரை நேரில் சந்தித்து புதுச்சேரி மாநிலத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கு சோகோ நிறுவனத்தின் கிளையை தொடங்க வேண்டும் என்று கேட்டுகொண்டேன். அதன்படி விரைவில் ஐ.டி. நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
புதுச்சேரி: ஏசி பஸ் சேவை அறிவிப்பு!

புதுச்சேரி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில், 10 ‘ஏசி’ பஸ்களும் அடக்கம். இந்த எலக்ட்ரிக் பஸ்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் மறைமலை அடிகள் சாலையில், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி முதல் நகரப் பகுதிகளில் மின்சார ‘ஏசி’ பஸ் சேவை துவங்குகிறது.