News March 26, 2025
இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

விருத்தாசலத்தில் இருந்து நேற்று (மார்.25) அதிகாலை லாரி ஒன்று வந்தவாசி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. லாரியை விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (55) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, பெருநகர் பூமாசெட்டிகுளம் அருகே லாரி சென்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில், எதிரே வந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (45) சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.
Similar News
News November 24, 2025
காஞ்சி: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 24, 2025
வண்டலூர்: காதலியை தொல்லை செய்த வாலிபர் கைது!

வண்டலூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கல்லூரியில் படிக்கும் போது சக நண்பரை காதலித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணிற்கு சென்னையில் வேலை கிடைத்ததும், காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், காதலிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ஆஸ்கர்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News November 24, 2025
காஞ்சி: விபத்தில் பெண் பரிதாப பலி!

காஞ்சி: கோனேரி குப்பம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(65). இவர் கூலி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


