News April 13, 2025

இரு பைக்குகள் மோதி விபத்து – வாலிபர் உயிரிழப்பு

image

வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 25, 2025

ராணிப்பேட்டை: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க

News November 25, 2025

ராணிப்பேட்டை: கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

image

வாலாஜாவை அடுத்த அம்மூர் கூட்டு ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா (30) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், வாலாஜா புலித்தாங்கல் பகுதியில் குட்கா விற்ற சங்கர் (57) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 105 பாக்கெட் குட்காவையும் பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.

News November 25, 2025

ராணிப்பேட்டை: ரூ.2.50 கோடி முறைகேடு ஊழியர் கைது!

image

ராணிப்பேட்டை, சோளிங்கர் எஸ்பிஐ வங்கியில் அசோசியேட்டாக குரு ராகவன்28 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஓராண்டு காலமாக செலவின கணக்கிலிருந்து ரூ.2.50 கோடி முறைகேடு செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த வங்கி மேலாளர் சௌதன்யா ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று நவ.24ம் தேதி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்கு பதிவு செய்து குரு ராகவனை கைது செய்தார்.

error: Content is protected !!