News April 13, 2025

இரு பைக்குகள் மோதி விபத்து – வாலிபர் உயிரிழப்பு

image

வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 6, 2025

ராணிப்பேட்டை:கடன் தொல்லைகள் நீங்க..இங்க போங்க!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பர்கடல் என்னும் கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான வைணவக் கோயிலாகும். இந்த கோவிலில் வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும், வேண்டுதல்கள் நிறைவேறும், அனைத்து நலன்களும் கிடைக்கும் என மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

News December 6, 2025

இராணிப்பேட்டை: பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

image

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 6, 2025

இராணிப்பேட்டை: Whats App மூலம் ஆதார் அட்டை!

image

இராணிப்பேட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!