News March 29, 2024

இரும்பாளியில் வைக்கோல் போர் தீயில் நாசமானது

image

இரும்பாளியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் நேற்று மார்ச் 28-ந்தேதி மாலை திடிரென தீ பிடித்தது. பின்னர் மலமலவென பிடித்த தீயினால் வைக்கோல் போர் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் போராடி தீயை அணைத்தனர்

Similar News

News February 7, 2026

புதுக்கோட்டை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

புதுகையில் 11,627 பேருக்கு லேப்டாப்: கலெக்டர் தகவல்

image

“உலகம் உங்கள் கையில்” திட்டத்தை ஜனவரி 5, 2026 முதல் கட்டமாக 10 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக புதுகை மாவட்டத்தில் கலை அறிவியல் கல்லூரி, வேளாண்மை மருத்துவம், டிப்ளமோ, ஐடிஐ, தனியார் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு முதல் கட்டமாக 5,674 -ம் இரண்டாம் கட்டமாக 5,953-ம் ஆக 11,627 லேப்டாப் வழங்கி உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

புதுகை: 6 சமத்துவபுரங்களை முதல்வர் ஸ்டாலின் திறப்பு

image

புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட 6 சமத்துவபுரங்கள் மற்றும் ரூ.1,876 கோடி மதிப்பிலான பல்வேறு துறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 100 வீடுகள் அமைக்கப்பட்டு பல்வேறு சமூகத்தினர் குடியமர்த்தப்படுகின்றனர். சாலைகள் உள்ளிட்ட திட்டங்களும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

error: Content is protected !!