News November 23, 2024

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ 23) மற்றும் நாளை(நவ 24) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்.

Similar News

News November 23, 2025

இராம்நாடு: இலவச வீடு பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவ படத்தில் 100 வீடுகள் வழங்க 100 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே தகுதியானவர்கள், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குதக்கோட்டை ஊராட்சியில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

ராமநாதபுரம்: சமையல்காரர் அடித்து கொலை

image

பாம்பன் அன்னை நகரை சேர்ந்தவர் அன்சாரி, 65; சமையல்காரர். இவரது வீட்டருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் ‘குடி’மகன்கள் போதையில் அன்சாரி வீட்டருகே மது அருந்திவிட்டு, அங்கேயே காலி பாட்டிலை வீசி உள்ளனர். அன்சாரி, அவர்களை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே அங்கு வந்த போதை ஆசாமிகள் சிலர், அன்சாரியை கட்டையால் அடித்து கொலை செய்தனர். போலீசார், கொலையாளிகளை தேடுகின்றனர்.

News November 23, 2025

பாம்பனில் காவலாளி மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை

image

பாம்பன் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது 61). இவர் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் காயம் ஏற்பட்டு ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். சிகிச்சைக்காக அன்சாரி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி நேற்று இறந்தார்.

error: Content is protected !!