News March 24, 2025

இராமநாதபுரம்: நல்ல பாம்பு வடிவிலான முருங்கைக்காய்

image

ஆப்பனூர் கிராமத்தில் விவசாயி முனியாண்டி விவசாய பண்ணை தோட்டத்தில் பயிரிடப்பட்ட முருங்கை மரத்தில் காய்த்துள்ள முருங்கைக்காய் ஒன்று வினோதமான முறையில் நல்ல பாம்பு வடிவிலான முருங்கைக்காய் வைத்து வளர்ந்தது இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்த விவசாயி குடும்பத்தினர் அந்த முருங்கைக்காயை கையால் பறித்து காண்பித்து புகைப்படம் எடுத்து எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 7, 2025

நேர்த்தி கடன் செலுத்த வினோத உடை

image

கமுதி, செங்கப்படை கிராமத்தின் காவல் தெய்வமான அழகு வள்ளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவில் சாக்குகளை பேண்ட் & சட்டை வடிவில் அணிந்து கொண்டு முகத்தையும் மூடிய படி ஊர்வலத்தில் கலந்து கொள்வர். முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டபோது கும்மி மேள தாளங்களுடன் சாக்கு ஆடை அணிந்த பக்தர்களும் நடனம் ஆடி செல்வர். இதனை கிராம மக்கள் நேர்த்திகடனாக செலுத்தி வருகின்றனர். *ஷேர்

News April 7, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.06) பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 24.02 மில்லி மீட்டர், இராமேஸ்வரத்தில் 20 மில்லி மீட்டர், மண்டபத்தில் 17.02 தங்கச்சிமடத்தில் 10.04 மில்லி மீட்டர், முதுகுளத்தூரில் 2 மில்லி மீட்டர், கமுதியில் 02.08 மில்லி மீட்டர், பரமக்குடி 02.04 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. *ஷேர்

News April 7, 2025

தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்

image

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகமும் அமைய உள்ளது என முதல்வர் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.60 கோடியில் பாம்பன் பகுதியிலும், ரூ.150 கோடியில் குந்துகால் பகுதியிலும் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உங்க ஊர் திட்டத்தை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!