News April 13, 2025

இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE

Similar News

News April 21, 2025

திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை

image

திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த ரயிலில் பெரிதும் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலின் சேவையை தினசரி இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

News April 21, 2025

மக்கள் குறைவிற்கு முகாமில் 580 கோரிக்கை மனுக்கள்

image

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி, 580 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பெற்றுக்கொண்டார்.

News April 21, 2025

கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை தண்டனை

image

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிடாலம் பகுதியில் 2014ஆம் ஆண்டு, புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தாக்கியதாக, தற்போதைய கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!