News April 13, 2025

இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE

Similar News

News December 15, 2025

ராமநாதபுரம்: குளத்தில் மூழ்கி தாய், மகன் பரிதாப பலி

image

ஆந்திராவை சேர்ந்தவர் ஏழுகுண்டல். இவர் குடும்பத்துடன் சாய்பாபா சுவாமியை ஊர்வலமாக ஒவ்வொரு ஊராக கொண்டு சென்று வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி பென்சலம்மாள் 38, குழந்தைகளுடன் குயவன்குடி சுப்பையா சாதுசுவாமி கோயிலுக்கு சென்றார். மதியம் குளத்தில் குளித்தபோது மூத்த மகன் நவீன் 12, தண்ணீரில் மூழ்கினார். பென்சலம்மாள் மகனை காப்பாற்ற குளத்தில் இறங்கியபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

News December 15, 2025

ராமநாதபுரம்: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

ராமநாதபுர மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள்<> இங்கு கிளிக்<<>> செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 15, 2025

பரமக்குடியில் பேருந்திற்கு அடியில் சிக்கிய மாடு

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு (எண்:19) நகர் பேருந்தின் பின்பக்கத்தில் மாடு சிக்கி கொண்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மாட்டை மீட்க முடியாமல் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராடினர். பின் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாட்டை பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!