News April 23, 2025

இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News November 20, 2025

ராம்நாடு: சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

ராமநாதபுரம் மக்களே, மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாதாந்திர <>தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்<<>> நாளை (நவ. 21) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. 10th, 12th, ITI, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய 8220809422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயனுள்ள இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க

News November 20, 2025

ராம்நாடு: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி.. 2 பேர் படுகாயம்!

image

பரமக்குடி அண்ணாநகரை சேர்ந்த 22 வயதான இளைஞர் சபரிவாசன் தனது நண்பர்கள் இருவர் என மூவருடன் ஒரே டூவிலரில் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் இருந்து மணி நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த பேருந்து மோதியதில் இளைஞர் சபரிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 20, 2025

ராம்நாடு: இன்று மின்தடை பகுதிகள்

image

ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்று (நவ. 20) தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காலை 9 – மாலை 5 மணி வரை நம்புதாளை, முள்ளி முனை, காரங்காடு, எஸ்.பி.பட்டினம், அச்சங்குடி, தினையத்தூர், திருவெற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!