News March 11, 2025

இராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,இன்று இரவு 10 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட்.

Similar News

News April 20, 2025

தலைமன்னார் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி பெண்

image

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை மாற்றுத்திறனாளி பெண் உட்பட 10 நீந்தி கடந்து வந்தனர். மும்பையை சேர்ந்த ஷஸ்ருதி மற்றும் பாலா கணேஷ் இருவரும் மாற்றுத்திறனாளிகள் நேற்று முன்தினம் காலை தலைமன்னார் கடலில் குதித்து நீந்த துவங்கினர். அவர்களுடன் 8 வீரர்களும் நீந்த துவங்கினர்.‌ இதில் மாற்றுத்திறனாளி ஷஸ்ருதி 11 மணிநேரமும், பாலா கணேஷ் 10:30 மணிநேரமும் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.

News April 20, 2025

வழிவிடு முருகன் ஆலயத்தில் திரைப்பட பூஜை துவக்கம்

image

சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி மகன் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் போர்கள் ஓய்வதில்லை திரைப்பட பூஜை ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருட்டுக்கு கண் இருக்கு உள்பட குறும்பட யூடியூப் நடிகர் மண்டபம் எம் எஸ் ராஜ், அமமுக தலைமை கழக பேச்சாளர் மண்டபம் ராஜா முஹமது உள்பட பலர் பங்கேற்றனர்.

News April 20, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஏப்ரல் 19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X  வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!