News April 6, 2025

இராணிப்பேட்டை: கல்விக்கடன் பெற அரசின் சூப்பர் திட்டம்…!

image

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய பிரதான் மந்திரி வித்யாலஷ்மி யோஜனா திட்டம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். NIRF தரவரிசைப்படி கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளம் மூலம்  கூடுதல் விபரங்களை தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 9, 2025

ராணிப்பேட்டை ரேஷன் கார்டு தாரர்கள் கவனத்திற்கு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அந்தந்த வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர், முகவரி திருத்தம், உறுப்பினர் சேர்க்கை, புகைப்பட பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 9, 2025

ராணிப்பேட்டையில் வீரமரணம் அடைந்த சோழன்

image

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தான் கி.பி 949ல் முதலாம் பராந்தகனின் மகன் ராஜாதித்யனுக்கும், ராஷ்டிரகூடர்களின் கங்க இளவரசர் பூட்டுகனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஆதித்த கரிகாலனை போல வீரமிக்க சோழ இளவரசனான ராஜாதித்யன் இந்த போரில் வீரமரணம் அடைந்தான். இவரது வீரத்தை போற்றும் விதமாக தான் அரக்கோணம் CISF ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் ராஜாதித்ய சோழன் (RTC), தக்கோலம் என மறுபெயரிடப்பட்டது. ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

ராணிப்பேட்டை: அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்

image

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பயணித்து வரும் அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான EPS இந்த மாதம் ராணிப்பேட்டைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் அவருக்கு சிறப்பாக வரவேற்பளிக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்திடவும், மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் சுகுமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

error: Content is protected !!