News April 14, 2025
இராசிபுரம்: பேருந்து விபத்து.. 7 பேர் பணி பணியிடை நீக்கம்

நாமக்கல்: ராசிபுரம் நகரில் இருந்து (ஏப்.14) இன்று சேலம் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து முன் சக்கரம் கழன்று ஓடிய விபத்தில், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து விபத்து ஏற்படும் அளவிற்கு அஜாக்கிரதையாக செயல்பட்ட ராசிபுரம் கிளை மேலாளர், வாகன மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப பணியாளர் என 7 பேரை பணி நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
நாமக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம் புதூர், துத்திக்குளம், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல் ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, வில்லிபாளையம், நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், பில்லூா், தேவிபாளையம், கீழக்கடை, சுண்டக்காபாளையம் உட்பட பல ஆகிய பகுதிகளில் நாளை நவ.20 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் என தகவல். SHARE IT
News November 19, 2025
புதுச்சத்திரம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே, ஏ.கே. சமுத்திரத்தை சேர்ந்தவர் மணி, 60; தனியார் நிறுவனத்தில், இரவு நேர காவலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, பாச்சல் பிரிவில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து. புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
News November 19, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.19) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 875402021), ராசிபுரம் – (சின்னப்பன்- 9498169092), திருச்செங்கோடு – (பெருமாள்- 9498169222), திம்மநாயக்கன்பட்டி – (ரவி – 9498168665) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


