News April 14, 2025
இராசிபுரம்: பேருந்து விபத்து.. 7 பேர் பணி பணியிடை நீக்கம்

நாமக்கல்: ராசிபுரம் நகரில் இருந்து (ஏப்.14) இன்று சேலம் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து முன் சக்கரம் கழன்று ஓடிய விபத்தில், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து விபத்து ஏற்படும் அளவிற்கு அஜாக்கிரதையாக செயல்பட்ட ராசிபுரம் கிளை மேலாளர், வாகன மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப பணியாளர் என 7 பேரை பணி நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
நாமக்கல்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News December 7, 2025
ஆஞ்சநேயர் பக்தர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தினசரி கட்டளைதாரர்கள் மூலம் வடைமாலை சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சிறப்பு அபிஷேகத்திற்கான முன்பதிவு கோயில் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (டிச.7) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
News December 7, 2025
பள்ளிப்பாளையம் அருகே வசமாக சிக்கிய நபர்!

பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள பாரில் அனுமதி இல்லாமல் விதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக, வெப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்த வீதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய் துகொண்டிருந்த கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல் (50), என்பவரை போலீசார் சக்திவேலை கைது செய்தனர். மேலும், தலைமறை வாக உள்ள, ‘பார்’ உரிமையாளர் கார்த்தி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


