News April 6, 2025

இராசிபுரம் தமிழ் அறிஞர் மு.ரா விற்கு விருது

image

இராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றியவர் மு.ரா என்கிற மு.ராமசாமி. இவர், கம்பர் குறித்தும் கம்பராமாயணம் குறித்தும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார், தற்போது இவருக்கு தமிழக ஆளுநர் R.N.ரவி விருது வழங்கி கௌரவித்து உள்ளார், இந்நிகழ்வு சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று (ஏப்.5) நடைபெற்ற ‘கம்பசித்திர விழாவில்’ பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Similar News

News April 19, 2025

நாமக்கல்லில் அடுத்தடுத்து மழை பெய்யும்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.19) 5 மி.மீயிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 8 மி.மீ.யிலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4 மி.மீ.யிலும் முதல் 8மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க.

News April 18, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (18/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News April 18, 2025

ஆயுள் பலம் தரும் ராசிபுரம் கோயில்!

image

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!

error: Content is protected !!