News September 13, 2024
இரவோடு இரவாக கட்டடம் இடித்து அகற்றம்

கரூர் கணபதிபாளையத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற அமைப்புடன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சாமானிய மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிற்கிணங்க இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.
Similar News
News November 20, 2025
கரூர் கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை வெண்ணைமலையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை வழங்குகின்றன. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை இளைஞர்கள் கல்விச்சான்றுகள், ஆதார் மற்றும் சுயவிவரத்துடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
News November 19, 2025
கரூர்: இனி அலைய வேண்டாம்!

கரூர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <
News November 19, 2025
கடவூர்: பாம்பு கடித்ததில் பெண் உயிரிழப்பு!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சென்னம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி வசந்தா (50). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்ததாகவும் பிறகு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் கணவர் வீரப்பன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


