News September 28, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
Similar News
News October 20, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (19.10.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக பொதுமக்களுக்கு எளிதான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவொரு அவசர நிலையும், குற்றச்செய்திகளையும் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது மாவட்ட பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறை நடவடிக்கை.
News October 19, 2025
BREAKING ஆவடி அருகே வெடி விபத்து: 4 பேர் பலி

ஆவடியில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திருநின்றவூரைச் சேர்ந்த யாசின், சுனில் ஆகிய 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் பட்டாசு வாங்க வந்தவர்கள் என தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டள்ளனர். இவ்வெடி விபத்தில் வீடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
News October 19, 2025
திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலெர்ட்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.23ஆம் தேதி திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி மறுதினம் கனமழை பெய்யும் எனவும், 22, 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.