News August 7, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 25, 2025

சிவகங்கை: மின் கசிவு ஏற்பட்டு முதியவர் பரிதாப பலி

image

மதுரை தல்லாகுளம் மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் தாகீர்முகமது 60. இவர் தேவகோட்டை அருணகிரி பட்டினத்தில் உள்ள சகோதரி சவுரா பீவி வீட்டிற்கு வந்து இருந்தார்.நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மோட்டாரை இயக்கியுள்ளார். மின் கசிவு ஏற்பட்டு தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீரை எடுத்ததால் தாகீர் மீது மின்சாரம் பாய்ந்து பலி யானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 25, 2025

சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 25, 2025

மானாமதுரை: 16 வயது சிறுமி கர்ப்பம்..இளைஞர் மீது போக்சோ

image

மானாமதுரை மூங்கில் ஊரணி பகுதியைச் சேர்ந்த ராமர் (23) என்ற இளைஞர் 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இந்நிலையில் அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அச்சிறுமி மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராமர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!