News February 17, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (17.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
உதயநிதியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

தி.மலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.“கொள்கை எதிரிகள் உதயநிதியை ‘Most Dangerous’ என கூறுகிறார்கள். அந்த அளவுக்கு அவர் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்” என பேசினார். 2026 தேர்தல் இலக்கை நோக்கி இளைஞர்கள் களப்பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் பேசினார்.
News December 14, 2025
தி.மலை: முதல்வருக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசு

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விழா இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மலை மாவட்ட இளைஞரணி சார்பில் வெள்ளி சிம்மாசனம் பரிசாக வழங்கப்பட்டது. உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
News December 14, 2025
தி.மலை: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள் இங்கு <


