News January 2, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 2 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
Similar News
News November 6, 2025
ராணிப்பேட்டை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
ராணிப்பேட்டை பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.06) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக காவல்துறையால் பெண்கள் பாதுகாப்பிற்காகவும், உடனை புகார் அளிக்கவும் உருவாக்கப்பட்ட காவல் உதவி கைபேசி செயலி பதிவிறக்கம் செய்ய குறியீட்டினை ஸ்கேன் செய்யவும் என அறிவுறுத்தப்பட்டது. பின் செயலியை பதிவிறக்கம் செய்து இன்றைய உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள். என்று மாவட்ட காவல்துறை செய்தியில் வெளியிட்டுள்ளது.
News November 6, 2025
ராணிப்பேட்டை: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நவ.7ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். வேளாண் தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் இன்று (நவ.06) தெரிவித்துள்ளார்.


