News September 27, 2024
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 27.9.2024 ) இன்று 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
Similar News
News December 6, 2025
கள்ளக்குறிச்சி: தந்தை வீட்டில் வசித்து வந்த பெண் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம், மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி கவிதா (33). கோவிந்தன் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் கவிதா காட்டனந்தல் கிராமத்தில் உள்ள தனது தந்தை சேகர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 6, 2025
கள்ளக்குறிச்சி: மகளை பார்க்கச் சென்ற அப்பாவுக்கு நேர்ந்த சோகம்!

கள்ளக்குறிச்சி: அலங்கிரி கிராமத்தைச் சேர்ந்த மாரி (70) என்பவர் அந்தியூரில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக நேற்று (டிச.5) தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் இறங்கி பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து மாரி மீது மோதியதில், மாரி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு நேர ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 5-ம் தேதி) இரவு முதல் நாளை (டிசம்பர் 6-ம் தேதி) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


