News May 7, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

Similar News

News January 1, 2026

ராணிப்பேட்டை மக்களுக்கு எஸ்.பி. அய்மன் ஜமால் புத்தாண்டு வாழ்த்து

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ராணிப்பேட்டை மக்கள் அனைவருக்கும் தனது 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ​அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிறக்கும் 2026 புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வளத்தை நிறைக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் புத்தாண்டை பொறுப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்.

News January 1, 2026

ராணிப்பேட்டை: சாவியால் சரமாரியாக தாக்கிய ட்ரைவர்!

image

சோளிங்கர் ரயில் நிலையம் அருகே பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் சூரைக்குளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை, சக ஓட்டுநர் அருண் ஆட்டோ சாவியால் சரமாரியாகத் தாக்கினார். காது மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!