News April 14, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(14.4.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 100— டயல் செய்யலாம்
Similar News
News November 25, 2025
கள்ளக்குறிச்சி: கஞ்சா வைத்திருந்த நபர் வசமாக சிக்கினார்!

ராயசமுத்திரம் ஏரியில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (நவ.24) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு சந்தேகப்படும்படி பைக்-உடன் நின்று கொண்டிருந்த வடக்கீரனூரை சேர்ந்த சக்திகுமாரை சோதனை செய்த போது, அவர் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த கஞ்சா, பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
News November 25, 2025
தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

ஆத்தூரை சேர்ந்த செல்வம் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவதாகவும், நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்து தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக கார் ஓட்டுநர் முத்துராமன் மீது நேற்று (24) போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News November 25, 2025
கள்ளக்குறிச்சி: மழையால் இடிந்து விழுந்த வீடுகள்!

கள்ளக்குறிச்சியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், நேற்று (நவ.25) மட்டும் 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தியாகதுருகம் அருகேயுள்ள வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அதேபோல், உதயமாமட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


