News April 14, 2025

இரவு ரோந்து பணி: போலீசார் விவரம் வெளியீடு…!

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் 14.04.2025 அன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணிக்காக  1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.

Similar News

News November 30, 2025

ராணிப்பேட்டை: திருமணமான சில நிமிடத்தில் சடலமாக மீட்பு

image

அரும்பாக்கத்தை சேர்ந்த அஜித் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தியா. இவர்களுக்கு இன்று (நவ.30)ஆம் தேதி அரும்பாக்கத் ரேணுகாம்பாள் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில நிமிடங்களில் அஜித் குமார் கோயில் அருகே உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். கலவை போலீசார் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 30, 2025

SIR: ராணிப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (30.11.2025) நடைபெற்று வரும் SIR முகாமில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவத் தகவலை உடனடியாக பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட BLO விடம் வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பங்கள் திருமப ஒப்படைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளனர்.

News November 30, 2025

ராணிப்பேட்டை: பட்டாவில் மாற்றமா? சூப்பர் வசதி

image

ராணிப்பேட்டையில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இங்கு <>க்ளிக்<<>> செய்து, வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும். உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!