News April 13, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 18, 2025
கிருஷ்ணகிரி: பெற்றோர் திட்டியதால் மகன் தற்கொலை!

ஓசூர் மூக்கண்டப்பள்ளி கோபாலப்பா நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது ஹர்ஷீப் பிரணவ், 11-ம் வகுப்பு மாணவர், அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோரிடம் திட்டு வாங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 18, 2025
கிருஷ்ணகிரி: கடன் உதவி வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (17.12.25) மாபெரும் தொழில்கடன் வசதியாக்க முகாம் மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் தலைமை தாங்கி, 30 தொழில் முனைவோர்களுக்கு ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய தொழில்கடன் உதவிகளை வழங்கினார்.
News December 18, 2025
கிருஷ்ணகிரி: மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வீட்டு வசதி, கல்வி உதவி, திருமண உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தகுதியுடையவர்கள் (1/1/26) முதல் (28.2.26) வரை உரியஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


