News April 13, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 12, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக, ஒரு சிறப்பு முகாம் வரும் (டிச.13)அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, வேப்பனஹள்ளி, ஓசூர், பர்கூர் மற்றும் அஞ்செட்டி ஆகிய எட்டு வட்டங்களிலும் அந்தந்த பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் “கீர்ப் புரஸ்கார் விருது 2026” விண்ணப்பம் தொடக்கம்.

குடியரசுத் தின விழா 2026-ஐ முன்னிட்டு வழங்கப்படும் “கீர்ப் புரஸ்கார்” சமூக மற்றும் வளர்ச்சி பணிக்கான விருதிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. சமூக நலன், மாற்றுத்திறனாளிகள் upliftment உள்ளிட்ட துறைகளில் சிறப்புப் பங்களிப்பு செய்தவர்கள் 15.12.2025க்குள் awards.tn.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !

கிருஷ்ணகிரி அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. (டிச.13) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இந்த முகாம் காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. 8, 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் 5,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்


