News December 5, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் விவரங்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

Similar News

News January 2, 2026

ராணிப்பேட்டையில் மின்தடை-உங்க பகுதி இருக்கா?

image

அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சோளிங்கர், மேல் வெங்கடாபுரம், பாணாவரம், கரிமேடு, தர்மநீதி, வேகாமங்கலம், வாலாஜா, ஒழுகூர், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைப்பாக்கம், நாகவேடு, புளியமங்கலம் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 2, 2026

ராணிப்பேட்டை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்!

image

சிறுகரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (ஜன.1) சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிலிருந்த படுகாயமடைந்த மற்றொரு நபர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

ராணிப்பேட்டை: ஏரியில் மிதந்த ஆண் சடலம்!

image

காவேரிப்பாக்கம் ஏரியில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சேர்ந்த கிரிதரன் (35) என்பவர், திருப்பாற்கடல் கோயிலுக்கு வந்தவர், ஏரியில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இவர் ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா (அ) தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸார் விசாரிக்கின்றனர். உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

error: Content is protected !!