News April 3, 2025
இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் மாவட்ட காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3) இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் அரியலூர் மாவட்ட காவல்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
Similar News
News December 1, 2025
அரியலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை அளவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை அரியலூரில் 3.2 மி.மீ, திருமானூரில் 2 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 5 மி.மீ, செந்துறையில் 3 மி.மீ, ஆண்டிமடத்தில் 3.4 மி.மீ, தா.பழுரில் 3 மி.மீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 24.6 மில்லிமீட்டர் மழை பதிவு.
News December 1, 2025
அரியலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
அரியலூர் மாவட்டத்தில் மழையால் 26 வீடுகள் சேதம்

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே டிட்வா புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 16 குடிசை வீடுகள் பகுதி அளவும், 10 காரை வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


