News August 15, 2024
இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 15.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
தூத்துக்குடி: மாடு முட்டி தொழிலாளி பலி

தூத்துக்குடி கே வி கே நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (43). இவர் ஜாகீர் உசேன் நகரில் உள்ள மாட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கடைக்கு வேனில் இருந்து இவர் மாடுகளை இறக்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு மாடு இவரது வயிற்றில் முட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது பற்றி தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
News November 24, 2025
தூத்துக்குடிக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று தொடர் மழை பெய்து வருவதால் இன்று நடைபெற வேண்டிய மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதனை எல்லோருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


