News August 13, 2024
இரவு காவல்துறையின் அவசர கால எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் பாதிரியார் கைது

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் ஒத்தாசை மாதா ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் பன்னீர்செல்வம். இவர் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக ஸ்ரீவை. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் பாதிரியார் பன்னீர்செல்வம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News November 28, 2025
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் பாதிரியார் கைது

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் ஒத்தாசை மாதா ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் பன்னீர்செல்வம். இவர் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக ஸ்ரீவை. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் பாதிரியார் பன்னீர்செல்வம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News November 28, 2025
தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு

மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற வகையில் தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ. 28) மாணவர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


