News April 30, 2025
இரண்டு வயது குழந்தை சாதனை பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் மோனிகா தம்பதியினர். இந்த தம்பதியின் 2 வயது குழந்தை தாரிக்க
‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டில்’ இடம் பெற்றுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பேசி பல மொழிகளை கற்றுள்ளார். இவரின் இந்த செயல் இந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வயது குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News November 22, 2025
தலைவாசல் அருகே டவுசர் கொள்ளையர்கள்!

தலைவாசல் அருகே நத்தகரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர், கேரள மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசூர்யா (25). இவர் வீட்டின் பின் பக்க கதவை பூட்டாமல் தூங்கி உள்ளார். நள்ளிரவில் முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் 2 பேர், வீட்டுக்குள் நுழைந்து அவரை மிரட்டி 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 22, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் முதல் ஈரோடு வரை மெமு பாசஞ்சர் ரயில் சேவை நவம்பர் 24-ந் தேதி முதல் தொடங்குகிறது. சேலம் – ஈரோடு மெமு ரயில் (66621) சேலத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி வழியாக 7.25 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு சேலம் வந்தடையும். (ஷேர் பண்ணுங்க)
News November 22, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் முதல் ஈரோடு வரை மெமு பாசஞ்சர் ரயில் சேவை நவம்பர் 24-ந் தேதி முதல் தொடங்குகிறது. சேலம் – ஈரோடு மெமு ரயில் (66621) சேலத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி வழியாக 7.25 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு சேலம் வந்தடையும். (ஷேர் பண்ணுங்க)


