News April 30, 2025
இரண்டு வயது குழந்தை சாதனை பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் மோனிகா தம்பதியினர். இந்த தம்பதியின் 2 வயது குழந்தை தாரிக்க
‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டில்’ இடம் பெற்றுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பேசி பல மொழிகளை கற்றுள்ளார். இவரின் இந்த செயல் இந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வயது குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News November 24, 2025
சேலம் மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு!

சேலம் மாநகர காவல்துறை, ஆன்லைன் கணக்கு மோசடிகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அறிமுகமற்ற நபர்களிடம் OTP, கடவுச்சொல், வங்கி விவரங்கள் போன்ற தகவல்களை ஒருபோதும் வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியான இணைய இணைப்புகள் மற்றும் உதவி கோரும் அழைப்புகள் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்துள்ளனர்.
News November 24, 2025
சேலத்தில் அம்மா திட்டியதால் நேர்ந்த சோகம்!

சேலம் பூமி நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் நவீனா(29). இவர் வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட சண்டையில் அவரது தாய் நவீனாவை திட்டியுள்ளார். வயிற்று வலியாலும், அம்மா திட்டியதாலும், மனம் உடைந்த நவீனா வீட்டில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 24, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


