News November 25, 2024
இரண்டு ரூபாய்க்கு வழக்கறிஞர் போராட்டம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, ரயில் நிலையம் சந்திப்பு வரை செல்லும் வழியில், தனியார் பேருந்து ஒன்றில் நேற்று பயணித்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் எனபவர், ரூ.8 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.10 கட்டணம் வசூலித்ததற்கு எதிராக போராட்டம் நடத்தினார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கூடுதலாக பெறப்பட்ட ரூ.2ஐ வழக்கறிஞிடம் திருப்பிக் கொடுத்தனர்.
Similar News
News November 19, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (19.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
“மருதமலை முருகனை தலை வணங்குகிறேன்” பிரதமர் மோடி!

கோவை, இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கோவையில் குடிகொண்டுள்ள மருமலை முருகனை தலைவணங்குவதாக கூறினார். மேலும் “கோவை என்பது கலாச்சாரம், கனிவு, கவின் படைப்புத்திரன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக்கொண்ட பூமி. தென்னகத்தின் சக்திபீடமான கோவை, தேசத்திற்கே ஜவுளித்துறையில் பங்களிப்பு செய்கிறது. இங்குள்ள ஜவுளிதொழில் தேசத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிக்கிறது” எனத் தெரிவித்தார்.
News November 19, 2025
கோவையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு!

கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசையும் கோவைக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.


