News February 25, 2025

இரண்டு டூவீலர்கள் மோதியதில் மூன்று பேர் காயம்

image

திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்த சாஹிர் நேற்று தனது மனைவியுடன் தனது டூவீலரில் புதுக்கோட்டை திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டூர் அருகே வந்தபோது அதே வழியில் பாலாஜி என்பவர் டூவீலரில் வந்து வேகமாக ஷாகிர் டூவீலர் மீது மோதினார். இதில் மூன்று பேரும் காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News April 21, 2025

திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

image

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில், திருச்சி – காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி பல்வேறு பணிகள் காரணமாக ஏப்ரல்.22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த வண்டி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2025

10 ஆவது படித்திருந்தால் போதும், உடனே அப்ளை பண்ணுங்க..

image

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th,12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் அனைவருக்கும் பகிரவும்

News April 21, 2025

உறையூர் குடிநீர் விவகாரம் – அமைச்சர் விளக்கம்

image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஏப்.21) அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, “திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழப்பு என்பது ஆதாரமற்றது. உயிரிழந்தவர்களின் குடும்ப மருத்துவரே சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். மேலும், சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!