News April 2, 2025
இரண்டு குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு

தென்காசி, சேந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மனைவி மகேஷ் (34) குடும்பத் தகராறு காரணமாக கடந்த 28ஆம் தேதி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளார். உடனடியாக மீட்க்கப்பட்ட அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
தென்காசி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News December 7, 2025
தென்காசி: கொலை வழக்கில் 11 பேர் அதிரடி கைது

நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயியான சங்கரலிங்கம் கொலை செய்யப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்து அதே கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கத்தின் உறவினர்களான சக்திவேல், ராமர், மாரியப்பன், பேச்சிமுத்து, சுப்புராஜ், துரை, செல்லையா, மாங்கனி, காளியம்மாள் மற்றும் மாரியம்மாள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News December 7, 2025
தென்காசியில் சூப்பர் வாய்ப்பு! 23,000 காலியிடங்கள்..

தென்காசியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 13.12.2025 அன்று புளியங்குடி S.வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. முகாமில் 175 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8-ம் வகுப்பு முதல் பல்வேறு பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு 23,000 காலியிடங்கள் உள்ளன. docs.google.com/forms/d/e/1FAIpQLSdphdh6a_aY0FZFe_8uwTs_qcpatFagNc7tzxmSa_i4B6S1Sw/viewform இதில் பதிவு செய்யவும். SHARE


