News April 2, 2025
இரண்டு குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு

தென்காசி, சேந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மனைவி மகேஷ் (34) குடும்பத் தகராறு காரணமாக கடந்த 28ஆம் தேதி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளார். உடனடியாக மீட்க்கப்பட்ட அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தென்காசி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 23, 2025
தென்காசி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News November 23, 2025
தென்காசி: தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்ற அவலம்

ஆழ்வார்குறிச்சி அருகே வடக்கு பாப்பான்குளம் பெரிய தெரு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல பாப்பான் கால்வாய் பகுதியில் கடந்து செல்வது வழக்கம். தற்போது மழை பெய்துள்ள நிலையில் தண்ணீரில் நனைந்தவாறு உடலை கொண்டு செல்லம் நிலை ஏற்பட்டது. விரைந்து அப்பகுதியில் பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


