News March 24, 2025

இரண்டு ஆண்டு சிறை அபராதம் ஆட்சியர் எச்சரிக்கை

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தை திருமணச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும் 21 வயது நிறைவடையாத ஆணும் திருமணம் செய்து கொண்டால் இதில் தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி குற்றம் என்றும் இதற்காக இரண்டு வருடம் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 9, 2025

கன்னங்குறிச்சி அருகே சோகம்: தொழிலாளி பலி

image

கன்னங்குறிச்சி அடுத்த தாமரை நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாதேஷ் (40), கடந்த 30-ந் தேதி முருகன் கோவில் அருகே கட்டிட வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி மாதேஷ் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை.

News December 9, 2025

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், இளங்கலை மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறதாகவும், தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 31-12-2025க்குள் http://umis.tn.gov.in/ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News December 9, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!