News January 1, 2025
இரண்டாம் நாளில் எழுந்தருளிய சுவாமிகள்

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.2 ஆம் நாளான இன்று ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வடபத்ரசாயி சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார்ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
Similar News
News December 7, 2025
விருதுநகர் அருகே பெண் தற்கொலை

திருத்தங்கல்-பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். சுப்புலட்சுமி தம்பதி (வயது 55). மாரியப்பன் குடிப்பழகத்தால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.சம்பவதன்று மாரியப்பன் குடித்துவர சுப்புலட்சுமி வீட்டிலிருந்த மாத்திரை எடுத்து தண்ணீரில் கரைத்து குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
News December 7, 2025
விருதுநகர்: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

விருதுநகர் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
வத்திராயிருப்பு அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்.அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்,ஆத்தடியான் இவர்கள் அனைவரும் இருளப்பன் என்பவரிடம் கான்ட்ராக் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து,அந்தப் பகுதிக்கு வந்த இருளப்பனிடம் சம்பளம் கேட்டுள்ளனர்.இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு குணசேகரனை இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.வத்திராயிருப்பு போலீசார் ஆனந்த், ஆத்தடியான் இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை.


