News February 15, 2025

இரட்டை படுகொலைக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

image

மயிலாடுதுறையில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை கடந்து போக முடியாது. 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது. இருப்பினும் இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Similar News

News December 1, 2025

மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த கனமழை!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. நேற்று நள்ளிரவு வரை இடைவிடாது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் சற்று மழை ஓய்ந்துள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 41.30 மிமீ மழை பெய்துள்ளது மயிலாடுதுறையில் 23.50மிமீ மணல்மேட்டில் 22மிமீ, கொள்ளிடத்தில் 36மிமீ, தரங்கம்பாடியில் 29.50மிமீ, செம்பனார் கோயிலில் 24மிமீ பதிவாகியுள்ளது

News December 1, 2025

மயிலாடுதுறை: மூழ்கிபோன 35,000 ஏக்கர் சாகுபடி நிலம்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வடிகால்களை தூர்வாராதது தான் இந்த பாதிப்புக்கு காரணம் என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் வருங்காலங்களிலாவது வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 1, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று நவம்பர் 30ஆம் தேதி இரவு முதல், நாளை டிசம்பர் 1ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் விபரங்கள் அவர்களது தொலைபேசி எண்ணுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!