News April 16, 2025
இரட்டை கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

ஆவடி அடுத்த விளிஞ்சியம்பாக்கத்தில் பண்ணை வீட்டில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களான ஜெகதீசன், விசாலினி தம்பதியர் வசித்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பூவலட்சுமி சிறையில் இறந்த நிலையில், சுரேஷிற்கு பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.
Similar News
News April 19, 2025
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்

ஆவடி கன்னடபாளையம் பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருபவர் சத்யா(42). இவரது கணவர் ஜெபராஜ் உடனான கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ஜெபராஜ் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் கார்மெண்ட்ஸ் உள்ளே நுழைந்து தன் மீதும் தன் மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். 50 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 19, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி; விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 682 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த <
News April 19, 2025
1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழா

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 18) நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 418 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும். 2.02 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒட்டுமொத்தமாக 1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழாவாக இந்த விழா அமைந்தது.