News April 27, 2025
இயலாக் குழந்தைகளுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

செங்கல்பட்டு: இயலாக் குழந்தைகளுக்கு கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் சிகிச்சை தொடர்பான கருவிகள் வாங்க, கனிமவள நிதி 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கலெக்டர் அறிவுறுத்துள்ளார்.
Similar News
News October 24, 2025
செங்கல்பட்டு: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News October 24, 2025
செங்கல்பட்டு: பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட நபரால் பரபரப்பு

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர், தென்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மதியம், தன் வீட்டின் அருகேயுள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுப்ரமணியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News October 24, 2025
செங்கல்பட்டு: நொடி பொழுதில் கோரவிபத்து- பறிபோன உயிர்

தொழுப்பேடு, சேர்ந்த கணபதி மற்றும் சிறுமையிலுார் சேர்ந்த தினேஷ், ஆகிய இருவரும், நேற்று இரவு பைக்கில் அச்சிறுபாக்கம் — சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பருக்கல் பகுதியில், எதிரே வந்த மகேந்திரா டூரிஸ்ட் வாகனம், இவர்களது பைக்கில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணபதி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


