News March 24, 2025

இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலை

image

வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான மற்றும் ஓர் அழகான சுற்றுலா இடம் புளியஞ்சோலை. கொல்லிமலைகளின் உச்சியில் ”தட்சினகங்கா” என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகும். இந்த லீவுக்கு மறக்காம இங்க போங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News November 16, 2025

திருச்சி: பள்ளி மாணவன் தற்கொலை

image

மணிகண்டம் அருகே நாகமங்கலத்தை சேர்ந்த லாரன்ஸ் மகன் ரோஷன் (15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ரோஷன் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோஷன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 16, 2025

திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வில் 576 பேர் ஆப்சென்ட்

image

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1, 14 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 3951 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3375 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 576 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இன்று ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2, 51 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 15,286 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

News November 16, 2025

திருச்சி: நண்பனை கொலை செய்த இருவர் கைது

image

மணப்பாறை அருகே கருணாநிதி என்பவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், எஸ்பி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இறந்தவரின் நண்பர்களான சூரகாலப்பட்டியை சேர்ந்த செல்வராஜ், கோட்டை கீழையூரை சேர்ந்த பூபதி ஆகியோர் முன்விரோதம் காரணமாக கருணாநிதியை கொலை செய்து பாலத்திற்கு அடியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நேற்று கொலையாளிகளை இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!