News April 19, 2025

இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

image

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.

Similar News

News December 10, 2025

சென்னை விமான நிலையத்தில் இன்று 14 விமானங்கள் ரத்து

image

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் 9வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இன்று மொத்தம் 14 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பினாங்கு, பாங்காக், சிங்கப்பூர் செல்லும் 3 பன்னாட்டு விமானங்களும், டில்லி, மும்பை, ஜெய்ப்பூர் செல்லும் உள்நாட்டு விமானங்களும் அடங்கும்.

News December 10, 2025

சென்னை: நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ஆசாமிகள்

image

சென்னை கொளத்தூரில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கொளத்தூர் பெரியார் நகரில், சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார், ஆட்டோ, பைக்குகளை போதையில் வந்த மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர்.

News December 10, 2025

வானகரம்: இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

image

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மஹாலில், இன்று (டிச. 10), அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கூட்டம் நடைபெறும் பகுதியில், அதிமுக தலைமை அலுவலகம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!