News April 19, 2025
இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.
Similar News
News December 9, 2025
சென்னை: LIC அருகில் உள்ள பழைய கட்டடம் பற்றி தெரியுமா?

சென்னை, அண்ணா சாலை LIC அருகில் இருக்கும் இடிந்த கட்டடத்தை நம்மில் பலரும் பார்த்ததுண்டு. அதன் வரலாறு உங்களுக்கு தெரியுமா? 1868ல் சென்னை வந்த மருத்துவர் W.E.ஸ்மித் இந்த இடத்தில் 1897ல் மருந்து விற்பனையகத்தை அமைத்தார். அதுதான் நாம் பார்க்கும் தற்போதைய கட்டடம். இவர் இதனை 1925ல் ஸ்பென்ஸருக்கு விற்றுவிட, 1934-ல் பாரத் இன்சூரன்ஸ் கம்பெனி இதனை வாங்கியது. பின், இந்த பில்டிங் 1957-ல் LIC வசம் வந்தது. ஷேர்!
News December 9, 2025
சென்னை: பொறுப்பு டிஜிபி மருத்துவமனையில் அனுமதி

தமிழக பொறுப்பு டிஜிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ள நிலையில், இன்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News December 9, 2025
சென்னை – நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதிகளில் வருமானவரி சோதனை

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ரிபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திலும், தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள வைட் ஹவுஸ் வைர நகைக்கடையிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு குறித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், நிறுவன ஆவணங்கள் மற்றும் நிதி பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு.


