News April 19, 2025
இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.
Similar News
News September 17, 2025
வார இறுதி நாள் முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு 20ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது கோயம்பேட்டில் இருந்து 19, 20ம் தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாள்களை முன்னிட்டு 1,055 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
News September 17, 2025
சென்னையில் 21ம்தேதி போக்குவரத்து மாற்றம்

Cyclothon சென்னை 2025’ நிகழ்ச்சியை ஒட்டி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் 21ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனம் கே.கே.சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பு, ஒ.எம்.ஆர் சாலை படூர் வழியாக மாமல்லபுரம் தங்கள் இலக்கை அடையளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News September 17, 2025
சங்கர் கணேசுக்கு திடீர் மூச்சுத் திணறல்

இசையமைப்பாளரும் நடிகருமான சங்கர் கணேஷ் மூச்சு திணறல் காரணமாக சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு நுரையீரலில் நீர் கோர்த்து உள்ளது கண்டு
பிடிக்கப்பட்டது.