News June 27, 2024
இயற்கை ஈடு பொருட்கள் தயாரிக்க ரூ.1 லட்சம் மானியம்

தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
தேனி ஆட்சியர் அலுவலகம் முன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் தேனி கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பதவிகளை சரண்டர் செய்யாதே, துணை சுகாதார நிலையம் பராமரிப்புக்கான நிதியை முறையாக வழங்கிடு, காலி பணியிடங்களை நிரப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர் வசந்தா பொருளாளர் எலியட், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
News July 10, 2025
தேனி: டிகிரி போதும் – மேனேஜர் வேலை!

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Manager – Loan Approval)க்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊதியமாக 15,000 வழங்கபடுகிறது. டிகிரி படித்திருந்தால் போதும் இதற்கு விண்ணபிக்கலாம். இந்த<
News July 10, 2025
தேனி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, தேனி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.