News June 27, 2024
இயற்கை ஈடு பொருட்கள் தயாரிக்க ரூ.1 லட்சம் மானியம்

தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 25, 2025
தேனி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 25, 2025
போடி அருகே பெண்ணை கடத்திய தாய் உள்ளிட்ட 7 பேர் கைது

போடி மேலச்சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்துராணி (55). இவரது மகன், தீபா (36) என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபா உள்ளிட்ட 7 பேர் இந்துராணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி, கடத்தி வெளியே செல்ல விடாமல் அடைத்து வைத்து உள்ளனர். அங்கிருந்து தப்பிய இந்துராணி அளித்த புகாரில் போடி தாலுகா போலீசார் தீபா உள்ளிட்ட 7 பேரை கைது (நவ.24) செய்தனர்.
News November 25, 2025
தேனி: ரூ.10,000 பரிசுத் தொகை அறிவித்த கலெக்டர்

தேனியில் 4வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக இலச்சினையை (LOGO) கருத்துருவுடன் (THEME) வடிவமைத்து, தங்களது முழு முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் அல்லது thenipro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 5.12.2025க்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.10000 பரிசு வழங்கப்படும் என்று கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்


